கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம், 1ணீ இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1 1/2 கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது.
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !,“ என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா.
உலகின் மிகப் பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையை தமது படைகள் மேற் கொண்டிருப்பதாகக் கூறுகிறது இலங்கை அரசு. வன்னியில் ஓடி ஓடி ஒதுங்கி- கடைசியில் பாதுகாப்பு வலயத்துக்ள் தஞ்சமடைந்திருந்த மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசபடைகள் அனைத்து விதமான பிரயத்தனங்களையும் மேற்கொண்டு பார்த்தன