| பின்னூட்டங்கள் (0) | |
|
- தமிழர்களின் நிலை என்ன இப்போது? நாடு கடந்த அரசாங்கமா?ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் கருத்துக்கணிப்பு
- தேவை இரண்டாவது எழுச்சி!
- திருமாவளவனும், இலங்கைத் தமிழர் மீதான பற்றும் - தமிழ்மகன் ஒருவனின் ஆதங்கம்
- தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?
- தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்!
- யாழ், வவுனியா தேர்தல்கள் - சில படிப்பினைகள்
- முகாம்களை விட்டு வெளியேற எப்போது எமக்கு அனுமதி?- ஐ.நா.பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பும் அகதிகள்
- 'சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த கல் எறிவதாக சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?'
- தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்
- இனிவரும் போர்...?


புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா பற்றிய சரியான புரிதலும், இந்தியாவை எப்படி நாம் கையாளவேண்டும் என்ற தெளிவும் எங்களுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக இந்தியாவைக் கையாளும் விடயத்தில் நாம் தோல்வி அடைந்தவர்களாகவே இருந்துவருகின்றோம்.
தமிழ் நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கருணாநிதிக்கு பல அனுகூலங்களை பெற்றுத் தரும் என்பது மட்டும் உண்மை. அதற்கான தேவை கருணாநிதிக்கு என்றும் இல்லாதவாறு இப்பொழுது தேவை. தேர்தல் நெருங்கும் அதேவேளை தான் நிச்சயம் அடுத்த முதல்வராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் அருகிவரும் வேளையில் குறிப்பாக அவரின் வயது தேர்தலில் முன்னையப் போல செய்ய இடம் தராது. அத்துடன் தான் வாழும் காலத்திலயே தனது பிள்ளைகளை அரசியலில் நிரந்தர இடம் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற காரணத்தினாலும் குறிப்பாக அவரின் தனயன் ஸ்டாலினை எப்படியாவது வரும் தேர்தலில் தனது கட்சியை வெற்றிபெற வைத்து ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளார். அதற்கு அவருக்கு பல உலகத் தமிழ் மாநாடு போன்ற மேடைகள் தேவை காரணம் தனது பிள்ளைகளை இந்த மேடைகளில் பெருமையாகக் கூறி பத்திரிகைகளில் முதற் பக்க செய்திகளாக வரவைத்து தமிழ் நாட்டின் மக்களை சென்றடையவைத்து ஸ்டாலின் மற்றும் அவரின் மற்றப் பிள்ளைகளையும் அரசியலில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தர உறுதிபூண்டுள்ளார்.
கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.
உலகையே தமது ஆழுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்சியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது. அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது. 









