தமிழ் தமிழ் என்று கதற்றுகிரீர். அம்மா என்று கூட அழைக்காத குழந்தை அய்யோ என்று கதறுகிறதே அங்கே. தமிழனாக பிறந்த குழந்தை தலையின்றி கிடக்கிறதே. தமிழனின் சாவை தடுக்காத நீ தமிழனுக்கு தலைவனென்று ஏன் சொல்கிறாய் ? ஒரு தலைவன் ஒரு துரோகம் இன்னொரு தலைவன் இரு துரோகம் இன்னும் ஒருவன் பல துரோகம். துரோகத்தின் பாதையில் படையெடுத்து செல்கிறீர் தமிழகத்தின் கதி என்ன. யாரிடம் எங்களை ஒப்படைக்க போகிறீர்.
சாக்கடயாம் அரசியலில் குளிக்கிறீரே. அங்கே நம் தமிழர் பிணவாடை நாற்றத்தில் தவிக்கிறாரே. தலைவர்களை தலைக்குமேல் தூக்கி ஆடும் என் தமிழினமே, தமிழக இனமே, நம் உறவுகளை காக்க எந்த ஒரு தலைவன் குரல் கொடுத்தான் கூறுங்கள் பார்ப்போம். கட்சி புகழை பறைசாற்றும் தொண்டர்களே என் தமிழர்களே எந்த ஒரு தலைவன்
ஈழத்திகாக ஒரு ஆயிரம் பேரை திரட்டி ஒரு போராட்டம் நடத்தினான் கூறுங்கள் பார்ப்போம்.
சு.பிரசாத் (தமிழ்நாடு) |
புரட்சி இனத்தை போராட்ட இனத்தை குருட்டு பூனைகலாய் மாற்றிவிட்டீர் எம் தமிழக தலைவர்களே. கூட்டம் கூட்டமாக ஒன்று சேருகிறீர் தமிழினத்தின் எதிரிகளுடன் கூட்டணி சேருகிறீர் கருணாவும் நீயும் ஒன்றுதானா? நீயும் தமிழன்தான் நரிகளுடன் சேர்ந்துகொண்டு நாடாள நினைக்கிறீர் நாயைவிட கேவலமாய் நாளை உன்னை நடத்துவான். நரி என்ன செய்யும் என்று நம் தமிழ் பாடம் சொல்லுமடா. மானம் விட்டீர், மரியாதையை விட்டீர், உரிமை விட்டீர் தமிழ் உணர்வை விடாதீர் இல்லையேல் இவ்வுலம் உம்மை விட்டுவிடும்.
தமிழனுக்கு குரல் கொடுங்கள் தமிழன் உங்களுக்கு உயிர் கொடுப்பான் சான்று முத்துகுமார் மாற்றானுக்கு மயங்காதீர் அவன் உன் உயிரை எடுப்பன் சான்று உங்களுக்கு தெரியும் இனியாவது திருந்துங்கள் பொருள் பிச்சை கேட்ட காலம் போய் உயிர் பிச்சை கேட்கிறான் தமிழன் ஒருவன். தயங்காமல் முடிவெடுங்கள் தமிழர் இருக்கிறோம் ஆறுகோடிபேர்
பின்னூட்டங்கள் (10)
...
Most of the indians are cunning and bloody crooks. Sad thing is Eelam tamils only knows now, the reality but singalese already know very well about them.
...
Karunanithi avan kudumbathukathan arasial nadathuran, makkalukaga illei. Avani pola tamilina durogi yarium parka mudiyathu.




.jpg)












