மேலும் இது தொடர்பாக சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்த திரையிலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் அமைப்பாளரான இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட கலைஞர்களுக்கு சமூக பார்வை இருக்கவேண்டியது அவசியம். தமிழக அரசியலையும், திரைப்படத்துறையையும் பிரித்தறியமுடியாது.
இன்று தமிழக மக்களிடத்தில் இன உணர்வு மங்கிவிட்டது. அதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பவும், நம்முடைய உறவான ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் நம்மிடம் தற்போதிருக்கும் பலமான ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை. இதனை மிகச்சரியாக இனத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தி நான், இயக்குநர்கள் சீமான், ஆர். கே. செல்வமணி,ஆர். சுந்தரராஜன், சேரன், அமீர், ஷரணசுப்பையா, செல்வபாரதி, பிரவீண் காந்த்,மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் மற்றும் ஏராளமான இணை, துணை இயக்குநர்கள் பிரச்சாரத்தைமேற்கொள்ள இருக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா பிறந்த இடமான காஞ்சிபுரத்தில் தொடங்குகிறோம். ஆரணி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநனர், தென்காசி, திருநெல்வேலி,சிவகங்கை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்கில் பொதுகூட்டம் நடத்தி, தமிழின விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துகிறோம்.
இலங்கையில் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலையாவதற்கு யார் மூல காரணம் என்பதை அடையாளம் காட்டுவோம்.
தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி வரும்போது எங்களுடைய எதிர்ப்பை எந்த வகையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் முறைப்படி காட்டுவோம். என்றார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





