எரிபொருள்களின் விலை உயர்வுக்கு மக்களவையில் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சி எம்.பி.க்களும் பாஜக, சமாஜவாதி மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து மக்களவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது குறித்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு மத்திய அரசை நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
"மத்திய அரசு திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆலோசித்து இருக்க வேண்டும். அல்லது மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி விவாதித்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பது சரியானது அல்ல.
தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது நல்லதல்ல. அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய நண்பன் என்ற முறையில் இதனை வலியுறுத்துகிறேன்' என்று டி. ஆர். பாலு கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயாவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





