SmallMediumLarge NarrowWideFluid
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன் அச்சிடு E-mail
[ துஸ்யந்தி ]   
புதன், 01 ஜூலை 2009 10:27

altஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

 

இந்தியா இலங்கைக்கு வழங்கிய முழு உதவியின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.அண்மைய போரில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருந்தது.முழமையான உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.

 

இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்தளவு உதவியது என்பது தொடர்பிலான முழு விபரங்களுக்கும் எங்களுக்கு தெரிந்தபோதிலும் நாங்கள் இந்தியாவை வெறுக்கவில்லை.

 

இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.

 

இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.

 

அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்.

 
 
Webமுரசம்

சிறப்பு ஆய்வுகள்

முழு மூச்சுடன் வேட்டையில் இறங்கியுள்ள மகிந்த

 

altதேர்தல் முடிவை வெளியிடுவதில் பல தில்லுமுல்லுகளை செய்து  ஒருவாறு பதவியை தக்கவைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ தற்போது தனது வேட்டையை முழு வேகத்துடன் ஆரம்பித்து இருக்கிறார்.

 
வரலாற்றுத் துரோகம் இழைக்குமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசியத்தை விரும்பும் மக்களும் ஒரு விடயத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழரின் எதிர்காலத்தை- அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களைச் சிதைத்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கத் துணிவது ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கே செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாக கருதப்படும்.

 
விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌ - நெடுமாற‌ன்

altவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!

 

altசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.