இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 
 

"தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் இராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.
 
 

இதற்கு துணைபுரியும் வகையிலேயே www.ltteir.org என்ற இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
 
 

மேலும் - மக்களோடு நெருங்கித் தொடர்பாடும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கு என பிரத்தியேகமாக - 'பத்மநாதன் பக்கங்கள்' எனும் ஒரு சிறப்புத்  தொடர்பாடல் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
 
குறிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு - வாரம் தோறும் - சனிக்கிழமைகளில் தமிழிலும் புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்தாடல்கள் மேற்கொள்வார் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கட்டுரைகள்