திங்கள், 15 மார்ச் 2010 11:45 | [ வா.கி.குமார் ] |
தாலிபான்கள் இந்தியாவை எதிரியாக பாவிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிரான யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்று தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா அப்துல் சலாம் ஸாயீஃப் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடக்க உள்ள பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம், இதர முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் ஏலம் நடத்தி விட்டு போகலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை திறந்து வைத்தார்.