| அவுஸ்திரேலிய அணியிலிருந்து ஹைடன் நீக்கம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைகிறதா? |
|
|
| [ வா.கி.குமார் ] |
| வெள்ளி, 09 சனவரி 2009 19:47 |
ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து மத்யூ ஹைடன் நீக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணியிலிருந்து ஹைடனை நீக்கும் திட்டம் டெஸ்ட் போட்டிகளில் சமீப காலங்களாக அவர் சரியாக விளையாடததால் அல்ல, மாறாக அவுஸ்திரேலிய அணியின் ஒருநாள், இருபதுக்கு 20 அணித்தேர்வுத் திட்டத்தில் ஹைடன் இல்லை என்பதாலேயே என்று அணித் தேர்வுக் குழுத் தலைவர் அன்ட்ரூ ஹில்டிச் தெரிவித்துள்ளார்.
""அணியிலிருந்து நீக்கியது பற்றி அவரிடம் தெரிவித்த போது அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை. குவின்ஸ்லாந்து அணிக்கு மீண்டும் திரும்பி ஓட்டங்களை அடித்து அடுத்த மாதம் தென்னாபிரிக்க தொடருக்கு தன்னைத் தேர்வு செய்ய நிர்ப்பந்திப்பாரா என்று தெரியவில்லை' என்றார்.
ஹில்டிச் கூறுவதைப் பார்க்கும்போது ஹைடனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தான் தெரிகிறது.
ஒருநாள் போட்டி அணி; பொண்டிங், மைக்கல் கிளார்க், பிராட் ஹேடின், ஜேம்ஸ் ஹோப்ஸ், நேதன் பிரேக்கன், ஷான் மார்ஷ், மைக் ஹஸி, டேவிட் ஹஸி, நேதன் ஹாரிட்ஸ், பென் ஹைபெந்காஸ், கேமரூன் ஒயிட், ஷான் டெய்ட், பீற்றர் சிடில். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து மத்யூ ஹைடன் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.