
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
பிரான்ஸ், ரோமானியா அணிகளுக்கிடையிலான போட்டி பேர்ன்ஸ் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் பலம்பொருந்திய பிரான்ஸ் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ரோமானிய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. போட்டியி நடைபெற்ற 80 நிமிடங்களும் இரண்டு அணிகளும் எப்படியாவது கோலொன்றைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடிய போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. புpரான்ஸ் அணியின் ஆட்டத்தில் தொய்வு நிலை காணப்பட்டது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் சூரிச் நகரில் நேற்றிரவு 8.15 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் இத்தாலிய அணிக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து. போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு உலகக்கிண்ண வெற்றியாளர்களான இத்தாலிய அணி, நெதர்லாந்திடம் 3-0 என்ற கணக்கில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. இத்தாலிய அணியின் முன்கள வீரர்களின் பொறுப்பற்ற விளையாட்டே நேற்றைய தோல்விக்கு காரணமென கால்பந்தாட்ட நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் இத்தாலி பெற்ற மிகப்பெரிய தோல்வி இது. கடந்த 30 ஆண்டுகளாக நெதர்லாந்திடம் தோல்வியடையாது இருந்த இத்தாலிக்கு நெதர்லாந்து அணியின் வீரர்கள் அதிர்ச்சியுடன், பாடம் புகட்டியுள்ளனர். டீநதர்லாந்து அணியினர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொய்வின்றி ஆட்டத்தினை கொண்டு சென்றனர். அதனை இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை.
இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் நான்காம் நாள் போட்டிகள் ஒஸ்தியாவில் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் சுற்றுத்தொடரிலேயே மிகவும் பலம்பொருந்திய அணிகளைக் கொண்ட குழு ‘டி’ யில் அங்கம் வகிக்கிக்னற அணிகள் மோதவுள்ளன.
இன்னஸ்பேர்க் நகரில் இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியில் ஸ்பெயினும், ரஷ்யாவும் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் ஸ்பெயின் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ரஷ்ய கால்பந்தாட்ட அணியினர் அண்மைக்காலத்தில் சிறந்த பெறுபோறுகளைக் காண்பித்துள்ளனர்.
சேல்பேர்க் நகரில் இன்று இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் ஐரோப்பிய கிண்ண நடப்பு வெற்றியாளர்கள் கிரீசும், பலம்பொருந்திய சுவீடன் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் கிரீஸ் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமென்று கருதப்படுகின்ற போதிலும், சுவீடன் அணியிடம் பலத்த சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கால்பந்தாட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





