பிரான்ஸ், ரோமானியா அணிகளுக்கிடையிலான போட்டி பேர்ன்ஸ் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் பலம்பொருந்திய பிரான்ஸ் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ரோமானிய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. போட்டியி நடைபெற்ற 80 நிமிடங்களும் இரண்டு அணிகளும் எப்படியாவது கோலொன்றைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடிய போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. புpரான்ஸ் அணியின் ஆட்டத்தில் தொய்வு நிலை காணப்பட்டது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் சூரிச் நகரில் நேற்றிரவு 8.15 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் இத்தாலிய அணிக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து. போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு உலகக்கிண்ண வெற்றியாளர்களான இத்தாலிய அணி, நெதர்லாந்திடம் 3-0 என்ற கணக்கில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. இத்தாலிய அணியின் முன்கள வீரர்களின் பொறுப்பற்ற விளையாட்டே நேற்றைய தோல்விக்கு காரணமென கால்பந்தாட்ட நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் இத்தாலி பெற்ற மிகப்பெரிய தோல்வி இது. கடந்த 30 ஆண்டுகளாக நெதர்லாந்திடம் தோல்வியடையாது இருந்த இத்தாலிக்கு நெதர்லாந்து அணியின் வீரர்கள் அதிர்ச்சியுடன், பாடம் புகட்டியுள்ளனர். டீநதர்லாந்து அணியினர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொய்வின்றி ஆட்டத்தினை கொண்டு சென்றனர். அதனை இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை.
இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் நான்காம் நாள் போட்டிகள் ஒஸ்தியாவில் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் சுற்றுத்தொடரிலேயே மிகவும் பலம்பொருந்திய அணிகளைக் கொண்ட குழு ‘டி’ யில் அங்கம் வகிக்கிக்னற அணிகள் மோதவுள்ளன.
இன்னஸ்பேர்க் நகரில் இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியில் ஸ்பெயினும், ரஷ்யாவும் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் ஸ்பெயின் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ரஷ்ய கால்பந்தாட்ட அணியினர் அண்மைக்காலத்தில் சிறந்த பெறுபோறுகளைக் காண்பித்துள்ளனர்.
சேல்பேர்க் நகரில் இன்று இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் ஐரோப்பிய கிண்ண நடப்பு வெற்றியாளர்கள் கிரீசும், பலம்பொருந்திய சுவீடன் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் கிரீஸ் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமென்று கருதப்படுகின்ற போதிலும், சுவீடன் அணியிடம் பலத்த சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கால்பந்தாட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


