
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
ஓஸ்திரியாவின் இன்ஸ்பேர்க் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதலாவது போட்டியில் பலம்பொருந்திய ஸ்பெயின் அணியும், ரஷ்யா அணியும் மோதின. இதில் போட்டி ஆரம்பித்த 20வது நிமிடத்தில் வில்லா பெற்ற முதல் கோலின் மூலம் தனது கணக்கை ஆரம்பித்த ஸ்பெயின், வில்லாவின் 44, 75 மற்றும் பேப்ரெகாசின் 91 நிமிடக் கோலின் மூலம் 4 கோல்களைப் பெற்றது.
ரஷ்யா அணி பலத்த போராட்டங்களை மேற்கொண்டாலும் இந்த அணியின் பல்லியு சென்கோ 86வது நிமிடத்தில் பெற்ற கோலை மாத்திரமே பெற முடிந்தது. இதன் மூலம் ஸ்பெயின் அணி, ரஷ்யாவை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் வில்லா ஹட்றிக் கோல்களைப் பெற்றார். இதுவே இந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் முதலாவது ஹட்றிக் ஆகும்.
சேல்பேர்க் நகரில் நேற்றிரவு 8.15க்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் எதிர்பார்ப்புக்களை மீறி சுவீடன் அணி, நடப்பு வெற்றியாளர்கள் கிரீசுக்கு அதிர்ச்சியளித்தது. இந்தப் போட்டியில் சுவீடன் அணியின் இப்ராஹிம் மூவிக் மற்றும் ஹான்சன் ஆகியோர் பெற்ற கோல்களின் உதவியுடன் 2-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதன் மூலம் சுவீடன் அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
ஐரோப்பியக் கிண்ண நடப்பு வெற்றியாளர்களும், கிண்ணத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதுமான கிரீஸ் கால்பந்தாட்ட அணிக்கு நேற்றைய தோல்வி பலத்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய போட்டிகள்: குழு ‘ஏ’யில் அங்கம் வகிக்கின்ற செக் குடியரவு, போர்த்துக்கல், சுவிற்சர்லாந்து, துருக்கி ஆகிய அணிகளுக்கிடையினான போட்டிகள் சுவிற்சர்லாந்தில் இன்று இடம்பெறவுள்ளன.
ஜெனீவாவில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் செக் குடியரசும், போர்த்துக்கல்லும் ஒன்றையொன்று எதிர்த்து ஆடுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனவே தாம் விளையாடிய போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
பேசல் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்தும், துருக்கியும் போதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே விளையாடிய போட்டியில் தோல்வியடைந்துள்ளன. எனவே இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும். இந்தப் போட்டியில் துருக்கி அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





