
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் குழு ‘ஏ’யில் அங்கம் வகிக்கும் அணிகள் நேற்று தமது இரண்டாவது லீக் போட்டிகளில் விளையாடின. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதல் ஆட்டத்தில் பலம் பொருந்திய போர்த்துக்கல் அணியும், செக் குடியரசு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
போர்த்துக்கல் அணியின் வெற்றிக் கோல்களை, டீக்கோ 8வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 63வது நிமிடத்திலும், குவாற்சமொ 90வது நிமிடத்திலும் பெற்றனர். செக் குடியரவு சார்பில் சிக்கோ மாத்திரம் 27வது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதனை அடுத்து போர்த்துக்கல் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவானார்.
பேசல் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பமான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்து அணியும், துடிப்பு மிக்க துருக்கி அணியும் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் முதல் சுற்று ஆட்டங்களுடன் சுவிற்சர்லாந்து வெளியேறுகிறது.
ஆட்டம் ஆரம்பித்தது முதல் துருக்கி அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவிற்சர்லாந்தின் ஹன்கன் யக்கின் போட்டியின் 32வது நிமிடத்தில் தனது அணிக்கான கோலைப் பெற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் சுதாகரித்த துருக்கி அணியின் வீரர்களான செமி செக்ருக் 57வது நிமிடத்திலும், ஆர்டார் ருறான் 92வது நிமிடத்திலும் கோல்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இன்றைய போட்டிகள்: ஒஸ்திரியாவில் இன்று இடம்பெறவுள்ள போட்டிகளில் குழு ‘பீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகள் மோதவுள்ளன. கோல்பேர்க் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் பலம் பொருந்திய ஜேர்மனிய அணியும், குரேஷிய அணியும் மோதவுள்ளன.
வியன்னா நகரில் இரவு 8.15க்கு ஆரம்பமாகும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், ஒஸ்திரியாவும், போலந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் போலந்து அணி வெற்றி பெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமென்று கால்பந்து நோக்கர்கள் கூறுகின்றனர்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





