
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
சூரிச் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதல் போட்டியில் தற்போதைய உலகக் கிண்ண வெற்றியாளர் இத்தாலியும், ரோமானியாவும் மோதின. இந்தப் போட்டியில் இத்தாலி இலகுவாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அந்த எதிர்பார்பை ரோமானியா தவிடுபொடியாக்கியது. போட்டியின் 55வது நிமிடத்தில் ரோமானியாவின் முற்ரூ கோலொன்றைப் பெற்றார். அடுத்த நிமிடமே இத்தாலியின் பனுச்சியும் கோலொன்றைப் பெற்றார். இதன் மூலம் போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இத்தாலிய கால்பந்தாட்ட அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறாததையடுத்து, காலிறுதிக்கு தெரிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியுடன் அடுத்து இடம்பெறவுள்ள போட்டியில் 5-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மாத்திரமே இத்தாலி அணி காலிறுதிக்கு தகுதி பெறும். எனினும் அவ்வாறான போட்டி முடிவுகள் கிடைக்கப்பெறுவது அசாத்தியமானது.
பேர்ன் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்த இரண்டாவது ஆட்டத்தில் பலம்பொருந்திய அணிகளான பிரான்சும், நெதர்லாந்தும் மோதின. இந்தப் போட்டியில் பிரான்ஸின் கனவுகளில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் நெதர்லாந்து மண்ணை வீசியடித்தது. போட்டி ஆரம்பம் முதலே தனது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்டத்தை வைத்திருந்த நெதர்லாந்து, 9வது நிமிடத்தில் குயிற், 59வது நிமிடத்தில் வன் பிறீஸ், 72வது நிமிடத்தில் ரொபான், போட்டியின் இறுதித்தருணத்தில் ஸ்நெய்டர் ஆகியோரின் மூலம் கோல்களைப் பெற்றது. புpரான்ஸ் அணிசார்பில் அந்த அணியின் நட்சத்திர வீரர் தியாரி ஹென்றி மாத்திரம் 72வது நிதிடத்தில் கோலொன்றைப் பெற்றார். இதனால் 4-1 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றிபெற்றது.
பிரான்ஸ் அணி மிக நீண்ட காலத்தின் பின்னர் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து நெதர்லாந்து காலிறுதிக்கு தெரிவாகியது. குழு ‘சீ’யில் ஏற்கனவே இடம்பெற்ற போட்டியொன்றில் இத்தாலியை, நெதர்லாந்து 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் களமிறங்கிய இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு நெதர்லாந்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது.
இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் குழு ‘டி’யில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கிடையிலான இரண்டவாது லீக் போட்டிகள் ஒஸ்தியாவில் இன்று நடைபெறவுள்ளன. இன்ஸ்பேர்க் நகரில் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பலம்பொருந்திய அணிகளான சுவீடனும், ஸ்பெயினும் மோதுகின்றன. இந்தப் போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
சேல்பேர்க் நகரில் 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது ஆட்டத்தில் பலம்பொருந்திய கிரீஸ் அணியும், ரஷ்யா அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே இடம்பெற்ற ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளன. எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இந்தப் போட்டியில் கிரீஸ் அணிக்கு பெற்றி வாய்ப்புக்கள் அதிகம்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





