SmallMediumLarge NarrowWideFluid
இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து ஹஸான் அதிரடி நீக்கம். அச்சிடு E-mail
வெள்ளி, 18 ஜூலை 2008 07:43

hashan_thilakarathna.jpgஇலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை வந்துள்ள நிலையில், இலங்கை அணியின் புதிய முகாமையாளராக முதல் நாள் நியமனம் பெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹஸான் திலகரட்ன, மறுநாளே விளையாட்டுத்துறை அமைச்சரால் நீக்கப்பட்டமை பெரும் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, இலங்கை அணியின் முகாமையாளர் பதவிக்கு ஹஸான் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார். இதனையடுத்தே ஹஸான்  முகாமையாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அரசியல்காரணங்களே முக்கியமாக காரணங்களான தெரிவிக்கப்படுகின்றன.

இதேநேரம், ஹஸான் அணி முகாமையாளராக நியமிக்கப்படுவது தொடர்பாக அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.  இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இடைக்கால நிர்வாக நிறைவேற்றுக் குழுவின் அனுமதி பெறப்படாமலே ஹஸான் திலகரட்ன அணி முகாமையாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் அறிமுக நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் மத்தியில் ஹஸான் திலகரட்ன இலங்கை அணியின் புதிய முகாமையாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் அவர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹஸான் 10 போட்டிகளுக்கு தலைவாரகச் செயற்பட்டுள்ளார்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.