| 2010இல் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் பிரேஷிலில் இல்லை. |
|
|
| ஞாயிறு, 20 ஜூலை 2008 08:47 |
|
அடுத்த பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரை 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உரிய காலத்திற்குள் தென்னாபிரிக்காவில் ஏற்பாடுகள் பூர்த்தியாகா விட்டால் பிரேஷிலுக்கு போட்டித் தொடரை மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகின. இது குறித்து பிரேஷில் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொட்ரிகோ பாய்வா தெரிவிக்கையில், “இது அபத்தமான கருத்து. அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார். பிரேஷில் கால்பந்தாட்டச் சம்ளேனத்தின் தலைவர் ரிகார்டோ டெய்ஸெய்ரா சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உபதலைவர் ஜெரோம் வால்க் சகிதம் தற்போது பிரான்ஸில் நடைபெறும் உலகக்கிண்ண கடற்கரை கால்பந்தாட்டப் போட்டிகளை பார்வையிடச் சென்றுள்ளார் என்றும், அவர்கள் இருவரும் இவ்வாறான தகவலை அறிந்திருக்கவில்லை என்றும் ரொட்ரிகோ பாய்வா தெரிவித்துள்ளார். எனினும், 2014ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் பிரேஷில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போதிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ரொட்ரிகோ பாய்வா, “அதற்கான ஏற்பாடுகளே 2012ஆம் ஆண்டளவில் தான் முடிவடையும்” என்றார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஷிலில் நடைபெறவுள்ளதாக வெளியான செய்திகளை பிரேஷில் கால்பந்தாட்ட சம்மேளனம் மறுத்துரைத்துள்ளது. குறித்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென்றும், போட்டிகளை நடத்துவது தொடர்பில் சிந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.