SmallMediumLarge NarrowWideFluid
முஹமட் ஆசிப் ஊக்க மருந்து எடுத்தது நிரூபணம்: 2 வருடத் தடை! அச்சிடு E-mail
புதன், 20 ஆகஸ்ட் 2008 01:20
asif16.jpgபாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் துணைத் தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான முஹமட் ஆசிப் (25) தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது "பி' மாதிரி சோதனையிலும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, அவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 வருட தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி முடிந்த பின் நாடு திரும்பும் போது, ஊக்க மருந்து வைத்திருந்ததாக துபாயில் ஆசிப் கைது செய்யப்பட்டார். 19 நாள்களுக்குப் பின் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில், ஐ.பி.எல். பொட்டிகளின் போது ஆசிப் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது சோதனையில் தெரியவந்தது.

இதனால், பாகிஸ்தான் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது வேண்டுக்கோளுக்கு இணங்க "பி' மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆசிப் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது அதிலும் நிரூபணமாகியுள்ளது. இதனை முஹமட் ஆசிப்பின் வழக்கறிஞர் ஷாத் கரீம் நேற்று தெவித்தார்.

முதல் பசோதனையில் ஊக்க மருந்தின் அளவு 6.2 மி.கி. இருந்தது. தற்போதைய சோதனையில் 5.4 மி.கி. உள்ளது. இந்த வித்தியாசம் ஆச்சயத்தை அளிக்கிறது என அவர் தெவித்தார். ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆசிப்புக்கு மேலும் 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.