SmallMediumLarge NarrowWideFluid
பீஜிங் ஒலிம்பிக் 2008: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம். அச்சிடு E-mail
புதன், 20 ஆகஸ்ட் 2008 23:52
suzil_kumar.jpgசீனாவின் பீஜிங்கில் நகரில் நடைபெற்றுவரும் 29வது ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் இது. ஒலிம்பிக்கில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஜிங்கில் நேற்று நடந்த பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் (66 கிலோக் கிராம்) இந்திய வீரர் சுஷில் குமார் களமிறங்கினார். முதல் சுற்றில் உக்ரைன் வீரர் ஆண்ட்ரி ஸ்டாட்னிக் உடன் மோதிய சுஷில் 1:8 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார். இதையடுத்து, ‘ரெபசேஜ்’ எனப்படும் மறுமோதல் சுற்றில் சுஷில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த சுற்றில், முதலில் அமெரிக்காவின் டெக் ஷ்வாப் உடன் மோதினார். அபாரமாக விளையாடிய சுஷில் 3:1 என்ற கணக்கில் வென்றார். அடுத்து 2வது ‘ரெபசேஜ்’ சுற்றில் பெலாரஸ் வீரர் ஆல்பர்ட் பாட்ரியோவ் உடன் மோதினார். இந்த போட்டியிலும் 3:1 என்ற கணக்கில் வென்று ஆச்சரியத்தை உண்டு பண்ணினார்.

மூன்றாவது சுற்றில், கஷகஸ்தான் வீரர் லெனாய்டு ஸ்பிரிடோனோவ் உடன் சுஷில் மோதினார். லெனாய்டு அரை இறுதிக்கு தகுதிபெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி கடும் போராட்டமாக அமைந்தது. 17:22 நிமிடம் நீடித்த இந்த போட்டியில், சுஷில் 3:1 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனையடுத்து, அவருக்கு, இந்தியாவின் முக்கிய தலைவர்கள், மாநில அரசுகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், பரிசில்களையும் அறிவித்துள்ளன.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.