SmallMediumLarge NarrowWideFluid
ஒலிம்பிக் பதக்கத்தின் மூலம் கிடைத்த புகழ் தற்காலிகமானதே!: அபினப் பிந்த்ரா. அச்சிடு E-mail
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 06:29

abhinav_bindra.jpgஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் கிடைத்த புகழ் தற்காலிகமானது, விரைவில் தன்னை அனைவரும் மறந்து விடுவார்கள் என்று இந்தியாவின் துப்பாக்கிச்சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா கூறியுள்ளார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம் அவர் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கத்தை பெற்றுக் கொடுத்தார். அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை வென்றதற்காக டில்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பின்னர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் ஒலிம்பிக் தங்கத்தால் கிடைத்துள்ள புகழ் தற்காலிகமானதே என்று கூறியுள்ளார்.

அவர் குறித்த இணையத்தள செய்தியில் மேலும் கூறியதாவது, “இந்த புகழ் கொஞ்ச காலமே இருக்கும். 20 நாட்கள் கழித்து எல்லோரும் இதனை மறந்து விடுவார்கள். எதிர்காலம் பற்றி எந்த உறுதியான திட்டமும் என்னிடம் இல்லை. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க செய்வதே என்னுடைய நோக்கம்.” என்றார்.

வெண்கல பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. 3 பதக்கங்களின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆதற்கு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உழைக்க வேண்டும் என்றும் அபினப் பிந்த்ரா மேலும் கூறியுள்ளார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.