| பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2010: 10,000 தொண்டர்கள் கடமையில். |
|
|
| ஞாயிறு, 28 செப்டெம்பர் 2008 23:41 |
இந்தியாவின் புதுடில்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் பங்குபற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக (Commonwelth Games) 10,000 தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தீயணைப்பு, கட்டுப்பாட்டு அறைகளில் பணிபுரிதல், தந்தியில்ல கருவிகளைக் கையாளுதல், மீட்புப் பணி போன்றவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறையினருக்கு இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளின்போது விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு கிராமங்களில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வழிகாட்டிகளாகவும் இவர்கள் விளங்குவார்கள். மருத்துவ உதவிகள் அளிப்பது குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இத்தகையப் பயிற்சிகளுடன் பல்வேறு அதிகாரிகள், வீரர்களுடன் நடந்து கொள்ளும் முறை குறித்தும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு பயிற்சி முறையை உருவாக்கி வருவதாக ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்காக தனது உள்கட்டமைப்பை பெரிய அளவில் மாற்றுவதற்கும் ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. போட்டிகளின்போது 3 ஆயிரம் வாகனங்கள் பணியில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து முறை சீராக இருப்பதற்கும் திட்டமிடப்படுகிறது. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








இந்தியாவின் புதுடில்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் பங்குபற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக (
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.