SmallMediumLarge NarrowWideFluid
இரானி கிண்ணப் போட்டிகளில் சேர்க்காததால் தூக்கமில்லாமல் தவித்தேன்: கங்குலி. அச்சிடு E-mail
வெள்ளி, 10 ஒக்டோபர் 2008 00:08
ganguly_res.jpgஇந்திய கிரிக்கட் அணியின் தேர்வுக் குழுவினர் மீது அந்த அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேசக் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள 36 வயது கங்குலி, இந்திய கிரிக்கட் சபை நியமித்துள்ள தேர்வுக் குழுவினரின் மோசமான செயல்பாடுகளே அதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

வங்க மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு கங்குலி அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். “என்னை மட்டுமே பலிகடாவாக்கி, தேர்வுக் குழுவினர் காட்டிய தலைகுனிவான செயல்பாடுகள்தான் திடீரென நான் ஓய்வை அறிவிக்க முக்கியக் காரணம். எல்லோரையும் போல என்னையும் பார்த்தார்களானால் எந்த சூழ்நிலையிலும் கிரிக்கட்டை தொடர்ந்து விளையாடுவதில் பிரச்னை இருக்காது. ஆனால் தேர்வுக் குழுவினர் எல்லோரையும் போல என்னைப் பார்ப்பதில்லை. சிலர் தொடர்ந்து மோசமாக ஆடிவரும்போதும் அணியில் வைத்துக் கொள்கிறார்கள். ஆதலால் அவர்களது (தேர்வுக் குழு) தயவில் கிரிக்கட் விளையாட நான் தயாராக இல்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருப்பதை எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்? அதுவும் 450க்கும் மேலான ஆட்டங்களில் விளையாடிய பிறகு. ஒரே ஒரு தொடரில் மட்டுமே மோசமாக விளையாடினேன். அதே தொடரில் மோசமாக ஆடிய மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பளிக்கிறார்கள்? மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பளித்த பிறகு அதிகபட்சமான ஓட்டங்களை சேர்த்துள்ளேன். ஆனால் எனக்கு குறைந்தபட்ச மரியாதைகூட அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இரானி கிண்ணப் போட்டிக்கான இதர இந்திய அணியில் சேர்க்காதபோதே, இதுவே கடைசியாக இருக்கட்டும் என நினைத்தேன். இரானி கிண்ண போட்டியில் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என ஒருபோதும் நான் நினைத்தது கிடையாது. ஆனால் வாய்ப்பு அளிக்கவில்லை. அந்த வேதனை மிகவும் கடுமையானது. அதனால் ஒரு மாதமாகத் தூங்கவில்லை. அணியிலிருந்து சேப்பல் என்னை நீக்கியபோது இருந்த வேதனைக்கும் மேலான கசப்பான அனுபவம் இரானி கிண்ணப் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்காதபோது ஏற்பட்டது” என்றார் கங்குலி.

ஓய்வு குறித்து பலமுறை சிந்தித்துள்ளேன். அதற்கு இதைக்காட்டிலும் சிறப்பான தருணம் வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தற்போது திட்டவட்டமாக ஓய்வை அறிவித்தேன். எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கு உறுதுணையாக ஓட்டங்களை குவிப்பதே அடுத்த இலக்கை. வெற்றியுடன் வெளியேறினால் அதுவே எனக்குக் கிடைத்த பெருமையாக இருக்கும் என்றார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.