
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
வங்க மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு கங்குலி அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். “என்னை மட்டுமே பலிகடாவாக்கி, தேர்வுக் குழுவினர் காட்டிய தலைகுனிவான செயல்பாடுகள்தான் திடீரென நான் ஓய்வை அறிவிக்க முக்கியக் காரணம். எல்லோரையும் போல என்னையும் பார்த்தார்களானால் எந்த சூழ்நிலையிலும் கிரிக்கட்டை தொடர்ந்து விளையாடுவதில் பிரச்னை இருக்காது. ஆனால் தேர்வுக் குழுவினர் எல்லோரையும் போல என்னைப் பார்ப்பதில்லை. சிலர் தொடர்ந்து மோசமாக ஆடிவரும்போதும் அணியில் வைத்துக் கொள்கிறார்கள். ஆதலால் அவர்களது (தேர்வுக் குழு) தயவில் கிரிக்கட் விளையாட நான் தயாராக இல்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருப்பதை எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்? அதுவும் 450க்கும் மேலான ஆட்டங்களில் விளையாடிய பிறகு. ஒரே ஒரு தொடரில் மட்டுமே மோசமாக விளையாடினேன். அதே தொடரில் மோசமாக ஆடிய மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பளிக்கிறார்கள்? மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பளித்த பிறகு அதிகபட்சமான ஓட்டங்களை சேர்த்துள்ளேன். ஆனால் எனக்கு குறைந்தபட்ச மரியாதைகூட அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இரானி கிண்ணப் போட்டிக்கான இதர இந்திய அணியில் சேர்க்காதபோதே, இதுவே கடைசியாக இருக்கட்டும் என நினைத்தேன். இரானி கிண்ண போட்டியில் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என ஒருபோதும் நான் நினைத்தது கிடையாது. ஆனால் வாய்ப்பு அளிக்கவில்லை. அந்த வேதனை மிகவும் கடுமையானது. அதனால் ஒரு மாதமாகத் தூங்கவில்லை. அணியிலிருந்து சேப்பல் என்னை நீக்கியபோது இருந்த வேதனைக்கும் மேலான கசப்பான அனுபவம் இரானி கிண்ணப் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்காதபோது ஏற்பட்டது” என்றார் கங்குலி.
ஓய்வு குறித்து பலமுறை சிந்தித்துள்ளேன். அதற்கு இதைக்காட்டிலும் சிறப்பான தருணம் வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தற்போது திட்டவட்டமாக ஓய்வை அறிவித்தேன். எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கு உறுதுணையாக ஓட்டங்களை குவிப்பதே அடுத்த இலக்கை. வெற்றியுடன் வெளியேறினால் அதுவே எனக்குக் கிடைத்த பெருமையாக இருக்கும் என்றார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





