|
ஞாயிறு, 12 ஒக்டோபர் 2008 02:41 |
|
மேற்கிந்திய வீரர் பிரையன் லாராவின் சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியடையவில்லை.
பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்டில் சச்சின் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தில் ரன் குவிக்க இந்திய அணி திணறி வருகிறது. 54 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்தியா விக்கெட் இழப்பின்றி 68 ரன் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடர்ந்தது. 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரட்லீ பந்து வீச்சில் கம்பீர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 45 ரன்கள் எடுத்திருந்த சேவாக் ஜான்சன் பந்து வீச்சில் ஹைடனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா சாதனையை இன்று முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு ஏமாற் றத்தை அளித்தார். 77 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக் கலாம் என்ற நிலையில் களமிறங்கிய சச்சின் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஜான்சன் பந்து வீச்சில் ஒயிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து லஷ்மண் டக் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான மாக ஆடிவந்த டிராவிட் வாட்சன் பந்து வீச்சில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
54 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கங்குலி 13 ரன்களுடனும், டோனி 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரட்லீ மற்றும் வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 430 ரன்கள் குவித்தது குறிப்பிடத் தக்கது.
|