SmallMediumLarge NarrowWideFluid
பெங்களூர் டெஸ்ட்: சச்சின் ஏமாற்றம் அச்சிடு E-mail
ஞாயிறு, 12 ஒக்டோபர் 2008 02:41

sa.jpgமேற்கிந்திய வீரர் பிரையன் லாராவின் சாதனையை சச்சின் டெண்டுல்கர்  முறியடிப்பார் என்ற ரசிகர்களின்  எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியடையவில்லை.
பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்டில் சச்சின் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தில்  ரன் குவிக்க இந்திய அணி திணறி வருகிறது. 54 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா  ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்தியா விக்கெட் இழப்பின்றி 68 ரன் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடர்ந்தது. 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரட்லீ பந்து வீச்சில் கம்பீர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 45 ரன்கள் எடுத்திருந்த சேவாக் ஜான்சன் பந்து வீச்சில்  ஹைடனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா சாதனையை இன்று முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு ஏமாற் றத்தை அளித்தார். 77 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக் கலாம் என்ற நிலையில் களமிறங்கிய சச்சின் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஜான்சன் பந்து வீச்சில் ஒயிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து லஷ்மண்  டக் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான மாக ஆடிவந்த டிராவிட் வாட்சன் பந்து வீச்சில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

54
ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கங்குலி 13  ரன்களுடனும், டோனி 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரட்லீ மற்றும் வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 430 ரன்கள் குவித்தது குறிப்பிடத் தக்கது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.