SmallMediumLarge NarrowWideFluid
எளிதாக வென்ற போத்துக்கல் அச்சிடு E-mail
திங்கள், 09 ஜூன் 2008 12:03
1._tor_portugal.jpg07.06.2008 அன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் போத்துக்கல் மிக எளிதாக துருக்கியை 2 ; 0  என வென்றது. ஜெனீவாவில் உள்ள “Stade de Geneve” மைதானத்தில் 20.45 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே போத்துகலின்  கை ஓங்கியிருந்தது. ஆனாலும் இடைவேளை வரை போத்துகல்லின் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவதில் துருக்கிய அணி வெற்றி கண்டது.

இடைவேளையின் பின் துருக்கிய வீரர்களின் தடுப்பு யூகத்தை உடைத்து கோல் போடுவதில் போத்துக்கல் வீரர்கள் முனைப்புக் காட்டினர். 61 வது நிமிடத்தில் Pepe  மிக சாதுரியமாக முதலாவது கோலை அடிக்க போத்துக்கல் பக்கம் ஆட்டம் ஒருநிலைப்பட்டது. அதன்பின்னர் பல சந்தர்ப்பங்கள் நழுவினாலும் போட்டி முடிவதற்கு சற்று முன் Raul Meireles இரண்டாவது கோலைப் போட போத்துக்கல் இலகுவாக வென்றது.

 இந்நிலையில் 11.06.2008 அன்று நடைபெறும் சுவிற்சர்லாந்து துருக்கி அணிகளுக்கிடையிலான போட்டி பெரு முக்கியத்துவமாகிவிட்டது. இவ்விரு அணிகளும் முதல்ப் போட்டிகளில் தோற்றதால் 11.06.2008 அன்று எவ் அணி தோற்றாலும் தொடர்ந்து முன்னேறும் சந்தர்ப்பத்தை இழக்கும்.

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.