| இத்தாலியை தோற்கடித்தது நெதர்லாந்து: பிரான்ஸ், ரோமானியா சமநிலை. |
|
|
| செவ்வாய், 10 ஜூன் 2008 00:30 |
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் மூன்றாவது நாள் போட்டிகள் சுவிற்சர்லாந்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில் இதுவரை காலமும் பங்குபற்றியுள்ள இத்தாலிய அணிக்கு இதுவரை சந்திக்காத மோசமான தோல்வியை நெதர்லாந்து அளித்தது. பிரான்ஸ், ரோமானியா அணிகளுக்கிடையிலொன மற்றைய போட்டி சமநிலையில் முடிந்தது.
பிரான்ஸ், ரோமானியா அணிகளுக்கிடையிலான போட்டி பேர்ன்ஸ் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் பலம்பொருந்திய பிரான்ஸ் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ரோமானிய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. போட்டியி நடைபெற்ற 80 நிமிடங்களும் இரண்டு அணிகளும் எப்படியாவது கோலொன்றைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடிய போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. புpரான்ஸ் அணியின் ஆட்டத்தில் தொய்வு நிலை காணப்பட்டது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் சூரிச் நகரில் நேற்றிரவு 8.15 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் இத்தாலிய அணிக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து. போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு உலகக்கிண்ண வெற்றியாளர்களான இத்தாலிய அணி, நெதர்லாந்திடம் 3-0 என்ற கணக்கில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. இத்தாலிய அணியின் முன்கள வீரர்களின் பொறுப்பற்ற விளையாட்டே நேற்றைய தோல்விக்கு காரணமென கால்பந்தாட்ட நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் இத்தாலி பெற்ற மிகப்பெரிய தோல்வி இது. கடந்த 30 ஆண்டுகளாக நெதர்லாந்திடம் தோல்வியடையாது இருந்த இத்தாலிக்கு நெதர்லாந்து அணியின் வீரர்கள் அதிர்ச்சியுடன், பாடம் புகட்டியுள்ளனர். டீநதர்லாந்து அணியினர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொய்வின்றி ஆட்டத்தினை கொண்டு சென்றனர். அதனை இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை. இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் நான்காம் நாள் போட்டிகள் ஒஸ்தியாவில் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் சுற்றுத்தொடரிலேயே மிகவும் பலம்பொருந்திய அணிகளைக் கொண்ட குழு ‘டி’ யில் அங்கம் வகிக்கிக்னற அணிகள் மோதவுள்ளன. இன்னஸ்பேர்க் நகரில் இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியில் ஸ்பெயினும், ரஷ்யாவும் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் ஸ்பெயின் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ரஷ்ய கால்பந்தாட்ட அணியினர் அண்மைக்காலத்தில் சிறந்த பெறுபோறுகளைக் காண்பித்துள்ளனர். சேல்பேர்க் நகரில் இன்று இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் ஐரோப்பிய கிண்ண நடப்பு வெற்றியாளர்கள் கிரீசும், பலம்பொருந்திய சுவீடன் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் கிரீஸ் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமென்று கருதப்படுகின்ற போதிலும், சுவீடன் அணியிடம் பலத்த சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கால்பந்தாட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் மூன்றாவது நாள் போட்டிகள் சுவிற்சர்லாந்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில் இதுவரை காலமும் பங்குபற்றியுள்ள இத்தாலிய அணிக்கு இதுவரை சந்திக்காத மோசமான தோல்வியை நெதர்லாந்து அளித்தது. பிரான்ஸ், ரோமானியா அணிகளுக்கிடையிலொன மற்றைய போட்டி சமநிலையில் முடிந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.