| ஜேர்மனியை வீழ்த்தி குரேஷியா காலிறுதியில்: போலந்து, ஒஸ்திரியா சமநிலை. |
|
|
| வியாழன், 12 ஜூன் 2008 23:57 |
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் குழு ‘பீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகளுக்கிடையில் ஒஸ்திரியாவில் நேற்று இடத்பெற்ற இரண்டாவது லீக் ஆட்டங்களில், பலம்பொருந்திய ஜேர்மனியை, குரேஷியா தோற்கடித்தது. அதேநேரம், போலந்துக்கும், ஒஸ்திரியாவுக்கும் இடையலான போட்டி சமநிலையில் முடிந்தது.
வேர்ன் எர்ச் ஹப்பல் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதலாவது லீக் ஆட்டத்தில் போட்டிகளை நடத்துகின்ற நாடுகளில் ஒன்றான ஒஸ்திரியாவும், போலந்தும் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றன. போலந்து அணியின் வீரர் குரேரோ 30வது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றார். ஆனாலும் போட்டியில் இறுதித்தருணத்தில் ஒஸ்திரியாவுக்கு கிடைத்த தண்டனை உதை மூலம் வஸ்ரிக் ஒரு கோலைப் பெற்றார். இதன்படி போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டியில் சமநிலை பெற்றதையடுத்து ஒஸ்திரியா முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. வியன்னா நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்த இரண்டாவது ஆட்டத்தில் பலம்பொருந்திய ஜேர்மனிய அணியும், அண்மைக்காலத்தில் அதிகளவில் சாதித்துள்ள குரேஷியா அணியும் மோதின. இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே குரேஷிய வீரர்கள் ஆட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். போட்டியின் 24வது நிமிடத்தில் குரேஷிய வீரர் ஸமா முதல் கோலையும், 62வது நிமிடத்தில் ஒலிக் இரண்டாவது கோலையும் போட்டு முன்னிலை வகித்தனர். எனினும் மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் ஜேர்மனி அணியின் நட்சத்திர வீரரான பொடல்ஸ்கி 79வது நிமிடத்தில் கோலோன்றைக் பெற்றார். இதன் மூலம் போட்டியில் 2-1 என்ற கணக்கில் குரேஷியா வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் இன்றைய போட்டிகள் குழு ‘சீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகளுக்கிடையில் சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ளன. சூரிச் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது ஆட்டத்தில் முதல்போட்டியில் தோல்வியடைந்த இத்தாலியும், ரோமானியாவும் மோதுகின்றன. பேர்ன் நகரில் இரசு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் பலம்பொருந்திய அணிகளான நெதர்லாந்தும், பிரான்சும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி காலிறுதிக்கு தகுதிபெறும். பிரான்ஸ் அணிக்கு போட்டியில் வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் குழு ‘பீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகளுக்கிடையில் ஒஸ்திரியாவில் நேற்று இடத்பெற்ற இரண்டாவது லீக் ஆட்டங்களில், பலம்பொருந்திய ஜேர்மனியை, குரேஷியா தோற்கடித்தது. அதேநேரம், போலந்துக்கும், ஒஸ்திரியாவுக்கும் இடையலான போட்டி சமநிலையில் முடிந்தது.
ஐரோப்பியப் பிராந்திய நாடுகளில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போட்டிகளில் குரேஷியா கால்பந்தாட்ட அணி, ஜேர்மனிய அணியைத் தொடர்ந்து தோற்கடித்து வந்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குரேஷியா காலிறுதிக்கு தகுதிபெற்ற இரண்டாவது அணியென்ற பெருமையைப் பெற்றது. இதனிடையே நேற்றைய போட்டியில் சமநிலை பெற்றதையடுத்து, சுவிற்சர்லாந்துக்கு அடுத்து ஒஸ்திரியாவும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்ற அணியென்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.