கோவை அருகே இடையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் நடந்த மண்டல மாநாட்டில் அவர் பேசியதாவது:


நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன.

 

சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம்.


விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆனால், போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மறைமுகமாக இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் அளித்து ஊக்குவித்து வருகிறது.

 

தமிழர்களின் பண்பாடு அழியாமல் இருக்குமானால் அது ஈழத் தமிழர்களால்தான். ஆனால், அவர்கள் போரில் கொல்லப்பட்டு அவர்களின் ஆடைகளை களைந்து சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்கின்றனர்.

 

ஈழத்தில் தமிழர்களாக பிறப்பது பாவமா? இதற்கு இந்தியாவில் வாழும் தமிழ் உணர்வு உள்ள தமிழர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார் அவர்.
 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்