நேற்று சனிக்கிழமை இரவு 8.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பரமானந்தம்,கலைவேந்தன்,வேதநாயகம்,சத்தியபவன் என்ற நான்கு தமிழ் இளைஞர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் நான்கு பேரும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என தெரிவித்த பொத்துவில் பொலிஸார் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அம்பாறை மவாட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 9.30மணியளவில் கைவிடப்பட்ட ஐஸ் வாடியில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
காரைதீவு விசேட அதிரடிப்படையின் புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இதன்போது கைத்துப்பாக்கி-02,கைக்குண்டுகள்-02,ரி56 துப்பாக்கி ரவைகள்-60 அதற்குரிய மகசின்கள் -02 என்பன மீட்க்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் இன்று காலை தம்மிடம் விசேட அதிரடிப்படையினரால் கையளிக்கப்பட்டதாகவும் கல்முனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





