திம்புக்கோட்பாட்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முதற்தடவையாகக் கோரிக்கையொன்றை விடுத்துள்ளன.
கடந்த மாத இறுதிப் பகுதியில் கூடிய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வந்ததுடன், அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்ட கோரிக்கையடங்கிய கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துத் தமிழ் கட்சிகளும் இந்தக் கோரிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுவதற்கு அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதேவேளை, அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





