மலேசியாவின் செந்துல் பஷர் என்ற இடத்திலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து 14 வயதுடைய டில்லுக்ஷன் என்ற சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
டில்லுக்ஷனின் தந்தை கொழும்பில் தச்சுத் தொழில் புரிந்து வரும் நிலையில் தாயாரும் பேத்தியாரும் சுவிற்ஸர்லாந்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பிலுள்ள தனது பேரனை இலங்கைக்கு வெளியில் எடுத்து சுவிற்ஸர்லாந்திற்கு வரவைப்பதற்காக பிரான்ஸிலுள்ள தனது நண்பர் ஒருவரின் உதவியை பேத்தியான எஸ்.புஸ்பரட்ணம் நாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுவிற்ஸர்லாந்துக்கு டில்லுக்ஷனை அனுப்புவதற்காக சாந்தி என்ற பயண முகவருடன் 15 ஆயிரம் யூரோ பணம் வழங்குவதற்கு இருதரப்பும் உடன்பட்டது.
இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவுக்கான சுற்றுலா விசா ஒன்றை பெற்று பயண முகவர்கள் சிறுவனை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச் சந்தர்ப்பத்தில் தங்களுக்குரிய முழுப்பணத்தையும் பெற்றுக்கொண்ட பயண முகவர்கள் சிறுவனை மலேசியாவிலுள்ள சாந்தி என்ற பயணமுகவரின் வீட்டில் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒருமாதம் கடந்தபோது சிறுவனை சுவிற்ஸர்லாந்துக்கு அனுப்புவதற்காக மேலும் 3 ஆயிரம் யூரோக்களை சாந்திக்கு அனுப்புமாறு சுவிற்ஸர்லாந்திலுள்ள புஸ்பரட்ணத்திடம் கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் வரை சிறுவன் குறித்த எந்தவொரு தகவலும் புஸ்பரட்ணத்திற்கு கிடைக்கவில்லை.
பின்னர், பாரிஸிலுள்ள தனது நண்பரை அணுகியபோதே 3 ஆயிரம் யூரோக்கள் மேலதிகமாகக் கேட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரிமாதம் ஒருவிதமாக தனது பேத்தியாருடன் தொலைபேசித் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட சிறுவன், தான் மலேசியாவில் இருப்பதாகவும் சாந்தி என்பவரால் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தான்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி மலேசியாவுக்கு விரைந்த புஸ்பரட்ணம் மலேசிய புலனாய்வுப் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து நடத்திய தேடுதலில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரியான ரி.மோகன் தெரிவித்தார்.
சாந்தி என்பவரால் தான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் தனக்கு அடித்ததாகவும் பல வீடுகளில் தன்னை வேலைக்கு அமர்த்தியதாகவும் தனது 8 மாத துன்பகரமான அனுபவத்தை சிறுவனான டில்லுக்ஷன் பொலிஸாரிடம் கூறியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து பயண முகவரான சாந்தியும் அவரது உறவினர் ஒருவரும் மலேசியப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





