இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வணங்காமன் என பெயரிடப்பட்ட கப்பலை ஐரோப்பியா வாழ் இலங்கை தமிழர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் இக்கப்பலில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகித்து அதை இலங்கை கடற்பகுதியில் அனுமதிக்க அந்நாடு மறுத்து விட்டது. இக்கப்பல் சந்தேகத்திற்கிடமானது என இந்திய கடற்படையும் தெரிவிக்கவே, வணங்காமன் சென்னை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், சர்வதேச கடல் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வணங்காமன் கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய மாநில அரசுகளின் முயற்சியினால், சென்னை துறைமுகத்திற்குள் வணங்காமனை அனுமதிப்பது என்றும், அதிலுள்ள பொருட்கள் மற்றொரு கண்டெய்னர் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்புவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அரசு அனுமதியை அடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு வணங்காமன் சென்னை துறைமுகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இக்கப்பலில் உள்ள பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிகிறது.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





