இலங்கையின் நீதித் துறை முறைமை, சட்டத் தொழிற்றுறை மற்றும் ஊடகங்களின் நிலைமை என்பவற்றுக்கான அச்சுறுத்தல் குறித்து சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.


இந்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கையின் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த இந்த நிறுவனம் மனித உரிமைகள் சட்டத்தரணிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் முறைமை என்பன கிரமமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இவை சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊகிக்கப்படுகின்றது என்று சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையை லண்டனில் வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஊழல் மோசடிக்கு எதிரான பிரசாரகருமான ஜேசி வெலியமுன கூறுகையில்;


உள்மட்டத்திலும் வெளிமட்டத்திலும் இருந்து அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டில் பிற்பகுதியில் அவரின் வீட்டின் மீது கிரனைய்ட் வீச்சு இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் நடத்தியவர் தொடர்பான விசாரணையில் சிறிதளவே முன்னேற்றம் அடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அரசியல் தீர்வுத் தலைவர்களினால் இந்தச் சம்பவங்கள் எவையும் உரிய முறையில் விசாரணை செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்ததாக பி.பி.சி.யின் சிங்களச் சேவை குறிப்பிட்டுள்ளது.


இக்குற்றச்சாட்டை ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார். தாமதத்திற்குக் காரணங்கள் உள்ளன. உதாரணமாக தாக்குதல் நடத்தியோரின் கையடக்கத் தொலைபேசியின் பதிவுகளைக் கண்டு பிடிப்பதே கடினமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வேண்டுமென்றே இந்த விசாரணைகளை தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் தலையிடுகின்றது என்பதையும் நான் நிராகரிக்கின்றேன் என்றும் அமைச்சர் யாப்பா கூறியுள்ளார்.


"இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் தமது தொழில்சார் கடைமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுவது அவசியமானதாகும். அச்சமோ தாக்குதல்களோ இன்றி அவர்கள் தமது கடமையை மேற்கொள்ள அனுமதிப்பது அவசியமானதாகவோ பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு ஆதரவாக ஆஜராகும் தனிப்பட்ட வழக்கறிஞர்களை பெயர் குறிப்பிடுவது முற்றிலும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.

 

அத்துடன், இதனால், அவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது என்று சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவரும் பிரிட்டனின் முன்னணி வழக்கறிஞருமான குட்காட் பிரபு கூறியுள்ளார்.


இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் குறைவாக இருக்கும் அபாயகரமான நிலைமை காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளர் ரோஹான் எதிரிசிங்க கூறியுள்ளார். 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புடன் இந்தச் சரிவு ஆரம்பமானது. அக்காலம் தொடக்கம் நிறைவேற்று அதிகாரத்துடன் நீதித்துறை மிகவும் நெருக்கமாகச் செல்வதற்கு ஆரம்பித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு முறைமைகளை ஸ்தாபிப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நாட்டை விட்டு வெளியேறி சாட்சிகள் செய்மதி சாட்சியங்கள் மூலம் சாட்சியமளிக்க முடியும் என்று சர்வதேச மாண்பு மிக்கோர் சுயாதீனக் குழு சிபாரிசு செய்திருந்தது.

 

ஆயினும், சாட்சிகள் எங்கே உள்ளனர் என்று கண்டுபிடிக்க அதிகாரிகள் இந்த முறைமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாக லண்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் சர்வதேச மாண்பு மிக்கோர் சுயாதீனக் குழுவின் முன்னாள் உறுப்பினரான சேர் மைக்கேல் ரோட்லி தெரிவித்துள்ளார்.


இது இவ்வாறிருக்கஇ நீதித்துறையை அரசியல் மயமற்றதாக்க வேண்டிய நடவடிக்கையை புதிய பிரதம நீதியரசர் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பை சர்வதேச சட்டத்துறை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என்றும் ஏனெனில், இச்சட்டத்தில் சில பகுதிகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற் பட்டவையாக உள்ளதாகவும் அவர்கள் அழைப்பு விடுத்ததுடன் அவசரகால ஒழுங்கு விதிகளையும் படிப்படியாக நீக்க வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர்.


இது சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் என்றும் உண்மை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குட்காட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்குப் பொறுப்பாக ஆணைக்குழு இருக்குமாயின் அது மிகவும் முக்கியமானது என நான் கருதுகிறேன் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.


வெளிநாடுகளிலிருந்து ஆலோசனையை ஏற்றுக் கொள்வதை நாடுகள் தயக்கம் காட்டுவதை விளங்கிக் கொள்ள முடியும். ஆனால், சர்வதேச குழுக்களிடமிருந்து ஆதாரத்தைப் பெற்றுக் கொள்வதையும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வதும் மிகவும் முக்கியமானது' என்றும் குட்காட் பிரபு தெரிவித்திருக்கிறார்.


எவ்வாறெனினும், இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. நல்லிணக்கத்தை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை இலங்கை அதிகாரிகள் நியமிப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லையென வெளியமுன கூறியுள்ளார்.

 

இது இலங்கைக்குப் பாரிய சவாலாகும். ஆனால், இது தொடர்பாக தற்போதைய தருணத்தில் அரசியல் தலைமைத்துவத்திடமிருந்து இத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் ஏதாவது ஈடுபாட்டை நான் காணவில்லை என்றும் பி.பி.சி.க்கு வெளியமுன கூறியுள்ளார்.

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch