உறவினர்களை பிரிந்து முகாம்களில் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களை விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து 6 மாதத்தில் முகாம்களில் உள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை கூறியது. ஆனால் தற்போது இலங்கை அரசு ஓசை இல்லாமல் வேறு ஒரு திட்டத்தை அரங்கேற்ற தொடங்கி உள்ளது.
தமிழர்கள் பகுதியில் சீரமைப்பு பணி முடிய 3 வருடமாகும் என்று இலங்கை அரசு சொல்கிறது. கண்ணி வெடிகளை அகற்ற இந்த கால அவகாசம் தேவை என்று சொல்கிறார்கள். இந்த பணி முடிய 5 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் இலங்கை அதிகாரிகள் சொல்லியபடி உள்ளனர்.
இந்த நிலையில் உலக நாடுகள் எதிர்ப்பை சமாளிக்க முள்வேலிக்கு பதில் சுவர் கட்ட தொடங்கி உள்ளனர். முகாம்களில் ரகசியமாக சில கட்டுமான பணிகளும் நடக்கின்றன. இதன் மூலம் ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி திட்டம் தீட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் தமிழர்களை விரட்டி விட்டு, அந்த பகுதிகளை முழுமையான சிங்களர்கள் குடியிருப்புகளாக மாற்றும் சதி திட்டமாக இது கருதப்படுகிறது. எனவே அகதிகள் முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றும் முயற்சிக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





