விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானம் தொடர்பாக அவர் மீது மக்களை நம்பிக்கைகொள்ளவைத்த காரணிகள் என அவர் குறிப்பிட்டார். ஆயுதங்களை மௌனப்படுத்தி நாட்டை ஒருநிலைக்கு ஜனாதிபதி கொண்டுவந்திருப்பதாகவும் கொஹண சுட்டிக்காட்டினார்.
“இந்தத் தொடர்ச்சியான ஆதரவைத் தொடர்ந்தே அனைத்து மாகாணசபைத் தேர்தல்களிலும் அரசாங்கம் வெற்றிபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்குப் பாரிய மக்கள் ஆதரவொன்றுள்ளது. அவரின் அரசியல் மீது கொண்டிருந்த நம்பிக்கை தற்பொழுது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிரந்தர சமாதானம் மீதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எமது இந்த வெற்றி தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்படும்” என அவர் கூறினார்.
இலங்கை வெளிநாடுகளின் நம்பிக்கையை வெல்லவேண்டிய சூழ்நிலை தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரினதும் நம்பிக்கையை வென்றிருக்கும் நிலையில் சர்வதேசத்தின் நம்பிக்கையை செல்லமுடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதுவித அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென்றும் மற்றும் சரியான அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லையென்றும் உலகநாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடதக்கது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





