குறுகிய காலத்தில் சுவிஸ் தமிழ் இளைஞர்களால் 20 000 கையொப்பங்கள் பெறப்படட்து. அதிகளவு சுவிஸ் மக்களால் கையொப்பமிடப்பட்ட இம்மனு காலத்திற்கு ஏற்றவாறு புதிய கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று 08.06.09 திங்கள் 12:15 மணியளவில் சுவிஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான Herr Henrry Sickert என்பவரிடம் கையளிக்கப்பட்டது.


பாராளுமன்ற வாசலில் பிரத்தியேகமாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்மக்களுடன் சுவிஸ் நாட்டவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது இந்து மதகுருவான திரு. சர்மா அவர்களும் சூரிச் புளுக்காவன் பகுதி கத்தோலிக்க மதகுருவான திரு. Walter Meier ஆகியோரால் வன்னிப்பகுதியில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. திரு. Walter Meier தனது பேச்சின்போது சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் தமது உறவுகளை இளந்து மிகவும் துக்ககரமான ஓர் சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் சுவிஸ்மக்களை அவர்களுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

முரசம்

முரசம்


இதேவேளை சிற்ப்பு விருந்தினர்களாக பாரளுமன்றஉறுப்பினரும் வெளிவிவகார அரசக்குழுவின் உறுப்பினருமான திரு. Rudolf Rechsteiner மற்றும் பாராளுமன்ற உறுபினரும் வெளிவிவாகர அமைச்சர் திருமதி. Micheline Calmy-Rey  அவர்கட்கு மிக நெருங்கியவருமான திருமதி. Maria Roth-Bernasconi உம் கலந்துகொண்டனர். 

திரு. Rechsteiner அவர்கள் சுவிஸ் அரசாங்கம் இலங்கையில் நடைபெற்ற  போரையும் அதன்பின் நடைபெற்றுவரும் நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

முரசம்


பின்னர் (So4Ta)  நிறுவனத்தலைவர் 1948 முதல் இன்றுவரையான தமிழின அழிப்புகள் பற்றி அவர் உரையாற்றும் போது குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர் இலங்கையரசின் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடினர். இன்று அவ்வாயுதப்போராட்டம் நசுக்கப்பட்டதே தவிர  தமிழர்களிர்க்கான ஒர் தீர்வு காணப்படவில்லை. தமிழர் தமது ஆயுதப்போரட்டத்தின் முன்னர் எப்படி இருந்தனரோ அதேபோன்ற சூழலிலே இன்று மீண்டும் வாழ்துவருகின்றனர். எனவே சுவிஸ் அரசாங்கம் விரைந்து செயற்ப்பட்டு வவுனியாவில் அடைத்து வைக்கப்படிருக்கும் மக்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்வதற்கான உதவிகளை புரியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இறுதியாக (So4Ta)  வின் இரண்டாம் நிலை தலைவரான திரு. Christoph Schmitter   குறிப்பிடும் போது தமது அமைப்பு தொடர்ந்தும் தமிழ்மக்களிற்காக சேவை செய்வாகள் என அறிவித்திருந்தார். இவர் சுவிஸின் மத்திய அரசில் தொலிற்க்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு பொறுப்புவகிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முரசம்


இதனைத் தொடர்ந்து 14 00 மணியளவில் Swiss Solidarity for Tamils இன் முக்கிய உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பொறுப்பாளருடனான திரு. Fux Pierre-Yves சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இந்நிறுவனத்தின் பேச்சாளர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழ்மக்களின் தொடர் போராட்டங்கள் சுவிஸ் அரசின் கவணத்தை எமது பக்கம் திருப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் திரு. Fux Pierre-Yves அவர்கள் நாளை (09.06.09) இலங்கை செல்லவிருப்பதாகவும் அங்கு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். தாம் அவரிடம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து தமிழ்மக்களின் உண்மை நிலை பற்றி கேட்டுடறியும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.


மேலும் சுவிஸ் அரசு செய்ய எண்ணியிருக்கும் வேலைத்திடங்கள் போன்றே அவர்கள் கையளித்த மனுவில் உள்ள கோரிக்கைகளும் உள்ளதாகவும் தாம் முடிந்தளவு தமிழ்மக்களிற்கு உதவுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch