குறுகிய காலத்தில் சுவிஸ் தமிழ் இளைஞர்களால் 20 000 கையொப்பங்கள் பெறப்படட்து. அதிகளவு சுவிஸ் மக்களால் கையொப்பமிடப்பட்ட இம்மனு காலத்திற்கு ஏற்றவாறு புதிய கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று 08.06.09 திங்கள் 12:15 மணியளவில் சுவிஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான Herr Henrry Sickert என்பவரிடம் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற வாசலில் பிரத்தியேகமாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்மக்களுடன் சுவிஸ் நாட்டவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது இந்து மதகுருவான திரு. சர்மா அவர்களும் சூரிச் புளுக்காவன் பகுதி கத்தோலிக்க மதகுருவான திரு. Walter Meier ஆகியோரால் வன்னிப்பகுதியில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. திரு. Walter Meier தனது பேச்சின்போது சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் தமது உறவுகளை இளந்து மிகவும் துக்ககரமான ஓர் சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் சுவிஸ்மக்களை அவர்களுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.


இதேவேளை சிற்ப்பு விருந்தினர்களாக பாரளுமன்றஉறுப்பினரும் வெளிவிவகார அரசக்குழுவின் உறுப்பினருமான திரு. Rudolf Rechsteiner மற்றும் பாராளுமன்ற உறுபினரும் வெளிவிவாகர அமைச்சர் திருமதி. Micheline Calmy-Rey அவர்கட்கு மிக நெருங்கியவருமான திருமதி. Maria Roth-Bernasconi உம் கலந்துகொண்டனர்.
திரு. Rechsteiner அவர்கள் சுவிஸ் அரசாங்கம் இலங்கையில் நடைபெற்ற போரையும் அதன்பின் நடைபெற்றுவரும் நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

பின்னர் (So4Ta) நிறுவனத்தலைவர் 1948 முதல் இன்றுவரையான தமிழின அழிப்புகள் பற்றி அவர் உரையாற்றும் போது குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர் இலங்கையரசின் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடினர். இன்று அவ்வாயுதப்போராட்டம் நசுக்கப்பட்டதே தவிர தமிழர்களிர்க்கான ஒர் தீர்வு காணப்படவில்லை. தமிழர் தமது ஆயுதப்போரட்டத்தின் முன்னர் எப்படி இருந்தனரோ அதேபோன்ற சூழலிலே இன்று மீண்டும் வாழ்துவருகின்றனர். எனவே சுவிஸ் அரசாங்கம் விரைந்து செயற்ப்பட்டு வவுனியாவில் அடைத்து வைக்கப்படிருக்கும் மக்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்வதற்கான உதவிகளை புரியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக (So4Ta) வின் இரண்டாம் நிலை தலைவரான திரு. Christoph Schmitter குறிப்பிடும் போது தமது அமைப்பு தொடர்ந்தும் தமிழ்மக்களிற்காக சேவை செய்வாகள் என அறிவித்திருந்தார். இவர் சுவிஸின் மத்திய அரசில் தொலிற்க்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு பொறுப்புவகிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 14 00 மணியளவில் Swiss Solidarity for Tamils இன் முக்கிய உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பொறுப்பாளருடனான திரு. Fux Pierre-Yves சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இந்நிறுவனத்தின் பேச்சாளர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழ்மக்களின் தொடர் போராட்டங்கள் சுவிஸ் அரசின் கவணத்தை எமது பக்கம் திருப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் திரு. Fux Pierre-Yves அவர்கள் நாளை (09.06.09) இலங்கை செல்லவிருப்பதாகவும் அங்கு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். தாம் அவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து தமிழ்மக்களின் உண்மை நிலை பற்றி கேட்டுடறியும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும் சுவிஸ் அரசு செய்ய எண்ணியிருக்கும் வேலைத்திடங்கள் போன்றே அவர்கள் கையளித்த மனுவில் உள்ள கோரிக்கைகளும் உள்ளதாகவும் தாம் முடிந்தளவு தமிழ்மக்களிற்கு உதவுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
| < முன் | பின் > |
|---|
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





