பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியின் சான்டி நகர்ப்பகுதியிலேயே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவே இத்தீவிபத்து இடம்பெற்றிருந்ததால் பெரும்பாலானவர்கள் நித்திரையில் இருந்தபோதே தீயினால் எரிந்து பலியாகியுள்ளனர்.
மின்சாரக் கேபிள்கள் வீட்டுக் கூரை ஒன்றின் மேல் அறுந்து விழுந்ததைத் தொடர்ந்தே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கினைத் தொடர்ந்து வேகமாகப் பரவிய தீ 30 க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்து நாசமாக்கியுள்ளது.
தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர் தீ பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பகுதியூடாகவே வெளியேறக் கூடிய நிலை உள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் தீ கடுமையாகப் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தீ பரவிய பின்னரும் வெளியேறுவதற்கு வழியில்லாத காரணத்தினாலேயே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆகும்.
அத்துடன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





