பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியின் சான்டி நகர்ப்பகுதியிலேயே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவே இத்தீவிபத்து இடம்பெற்றிருந்ததால் பெரும்பாலானவர்கள் நித்திரையில் இருந்தபோதே தீயினால் எரிந்து பலியாகியுள்ளனர்.

 

மின்சாரக் கேபிள்கள் வீட்டுக் கூரை ஒன்றின் மேல் அறுந்து விழுந்ததைத் தொடர்ந்தே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


மின் ஒழுக்கினைத் தொடர்ந்து வேகமாகப் பரவிய தீ 30 க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்து நாசமாக்கியுள்ளது.

 

தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர் தீ பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பகுதியூடாகவே வெளியேறக் கூடிய நிலை உள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் தீ கடுமையாகப் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் தீ பரவிய பின்னரும் வெளியேறுவதற்கு வழியில்லாத காரணத்தினாலேயே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆகும்.


அத்துடன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

 
  1. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  2. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  3. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  4. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  5. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  6. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  7. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  8. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  9. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  10. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்

கட்டுரைகள்