SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கினால் அமெரிக்காவின் நிலை என்ன? அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
திங்கள், 12 சனவரி 2009 20:08

altபாகிஸ்தானில் பரவிவரும் தீவிரவாதம் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

 

இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குநர் மைக்கேல் மெக்கொனல் தெரிவிக்கையில்;


பாகிஸ்தான் அரசை அழிப்பதே தனது இலட்சியமென 2007 கடைசியில் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின் லேடன் ஒரு கட்டளை பிறப்பித்தார். தனது தலைமையின் கட்டளைக்காக உயிரையும் விடக்கூடிய அர்ப்பண உணர்வுள்ளவர்கள் தீவிரவாத சக்திகளிடம் உள்ளனர். பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது.

 

அமெரிக்கர்களை அதிக அளவில் கொல்ல வேண்டும் என நினைப்பவர்களிடம் அணு ஆயுதம் சிக்கினால் அமெரிக்காவின் நிலை என்னவாகும். இது அனைவருக்கும் கவலை அளிக்கிறது.


பாகிஸ்தான் அரசிடம் உள்ள ஆயுதங்கள் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பது குறித்தே நாம் விழிப்புடன் கண்காணித்து வரவேண்டியுள்ளது.

 

மேலும், பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் உள்ளதுடன், மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்துதான் வந்துள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.


மும்பை தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு எல்லைகளிலும் படைகளைக் குவித்து தயார் நிலையில் உள்ளனர்.


இரு நாடுகளும் பதற்றத்தை எப்படிக் குறைக்கப் போகின்றன எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

 
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.