SmallMediumLarge NarrowWideFluid
மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பதவியேற்ற முதல் நாளிலேயே நடவடிக்கை - பராக் ஒபாமா உறுதி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
திங்கள், 12 சனவரி 2009 20:18

altபதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

 


"ஏ.பி.சி.' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 


தனது தலைமைத்துவத்தின் கீழ் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா புதிய அணுகுமுறையொன்றை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார். ""ஈரானானது எமது மிகப் பெரிய சவால்களிலொன்றாக உள்ளது.

 

இந்நிலையில் நாங்கள் புதிய அணுகுமுறையொன்றை முன்னெடுக்கவுள்ளோம். மத்திய கிழக்கில் அணு ஆயுத போட்டியொன்று உருவாக்கப்படுவதற்கு அணு ஆயுத வல்லமையுள்ள ஈரான் தூண்டுகோலாக உள்ளது'' எனத் தெரிவித்த பராக் ஒபாமா, ""நமது பிரச்சினைகளின் மூலõதாரம் தொடர்பில் தெளிவுபடுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் நாம் மதிப்பளிப்போம். நாங்கள் அதற்கு தயாராகி வருகிறோம்'' என்று கூறினார்.

 

ஈரான் மட்டுமல்ல, ஹமாஸ் போராளிகள், ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் என்பனவும் அமெரிக்காவின் புதிய அரசாங்கத்திற்கு சவாலாக உள்ளதாக தெரிவித்த ஒபாமா, தான் ஜனாதிபதி பதவியை ஏற்றவுடனேயே மத்திய கிழக்கிலான பரந்தளவு சமாதான செயற்கிரமங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார்.

 

ஈரானானது லெபனானிய ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

 

""நான் இவ்விவகாரம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருகிறேன். எனவே, நான் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக சேவையாற்ற ஆரம்பிக்கும் முதல் நாளிலேயே மத்திய கிழக்கிலான முழுமையான சமாதான செயற்கிரமமொன்றில் உடனடியாக களம் இறங்க முடியும் என ஒபாமா தெரிவித்தார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.