மேற்படி புகையிரதமானது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்று அநேக வீடுகளின் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்கரை நகரமான வியரெக்கியோ நகரில் இடம்பெற்ற இந்த விபத்தின்போது வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகியுள்ளதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பலியானவர்களின் தொகை மென்மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயமுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புகையிரத வெடிப்பு சம்பவமானது அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. 14 தாங்கிகளைக் கொண்ட இப்புகையிரதத்தில் திரவ பெற்றோலியம் வாயு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இரு எரிவாயு நிரப்பப்பட்ட தாங்கிகள் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.
வெடிப்பு இடம்பெறுவதற்கு முன் புகையிரத தாங்கிகளிலிருந்த எரிவாயு வெளியேறி அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வெடிப்பையடுத்து புகையிரதத்தைச் சுற்றியுள்ள 300 மீற்றர் பரப்பில் டசின் கணக்கான சிறிய வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் இரு சிறிய கட்டிடங்கள் இந்த வெடிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டு எரிந்து இடிந்து விழுந்துள்ளன. அக்கட்டிட இடிபாடுகளின் கீழ் மேலும் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது.
மேலும் புகையிரதத்துடன் பல வீடுகளும் கட்டிடங்களும் தீப்பற்றி எரிந்ததால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது. அப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் வரை வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





