SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 5 பேர் பலி அச்சிடு E-mail
சனி, 07 ஜூன் 2008 15:08
paks_bom.jpgபாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸ் குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இந்தக் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸார் உட்பட 12 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

டெறா இஸ்மாயில்கான் நகரத்தில் துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட குண்டை தூரக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைத்துள்ளதாக உள்ளூர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கப்பார் கைசறானி குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி குண்டு பொருத்தப்பட்ட துவிச்சக்கர வண்டியானது முன்னர் குண்டு வெடித்த திறந்த வெளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகக் குறிப்பிட்ட கப்பார் கைசறானி , இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்த குண்டுத்தாக்குதல் பொலிஸாரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.