இந்த வெடிப்பு சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு ஒரு கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப் பாதையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 37 ஆண்கள் காணாமல்ப் போயுள்ளதாக குறிப்பிட்ட பிராந்திய கண்ணிவெடி பாதுகாப்பு கண்காணிப்பு பேச்சாளாரான மரீனா நிக்கிரினா, இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது சுரங்க வேலையில் ஈடுபடும் 4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த வெடிப்பு சம்பவத்தின் போது சுரங்கத்திற்குச் செல்லும் பாதை சேதமடைந்துள்ளதால் அதற்கு கீழ் செல்வது சாத்தியமற்றதெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததென குறிப்பிட்ட பிராந்திய கண்ணிவெடி பாதுகாப்பு கண்காணிப்பு பேச்சாளார், இதன் காரணமாக தமது அலுவலகத்தின் யன்னல்கள் உடைந்துள்ளதுடன் பாரம் துக்கியின் தூண்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த வருடம் நடைபெற்ற இவ்வாறான வெடிப்புச் சம்பவங்களில் 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





