எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இதற்கான விலையேற்றத்தை குறைக்கலாமென  ஜெகத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரவுண் அழுத்திக் கூறியுள்ளார். 
 
1970களில் இருந்த எண்ணெய் விலையேற்றத்தைவிட தற்போது ஆபத்தான நிலையிலுள்ளதெனவும், பல சமநிலையிலுள்ள சக்தி சந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.
 
30 வருடங்களில் 3ஆவது பாரிய எண்ணெய் அதிர்ச்சிக்கு முகம் கொடுத்து வருவதாக குறிப்பிட்ட கோர்டன் பிரவுண், எண்ணெய் விலையேற்றமானது உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக கூறினார்.
 
இந்த எண்ணெய் விலையேற்றமானது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் 
பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் தற்பொழுது புதிய உடன்படிக்கையொன்று எட்டப்பட வேண்டியது அவசியமாகுமென அவர் கூறினார். 
 
அணுசக்தி மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றால் தங்களால் எண்ணெயின் பாவணையில் தங்கியிருப்தைக் குறைத்துக்கொள்ள முடியுமென பிரித்தானியப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளர்ர். 
 
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தமது கிளைகளை பரப்பவுள்ளதாகவும், இதன் காரணமாக சக்தி சந்தையில் சமநிலையைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் எதிர்வரும் வருடங்களில் எண்ணெய்ப் பாவனையில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ள முடியுமென்பதை இது தங்களுக்கு  உணர்த்துமென அவர் கூறினார். 
 
ஒவ்வொரு எண்ணெய் வாடிக்கையாளர்களான வாகனம்  வைத்திருப்பவராயினும் சரி, எரிவாயு உபயோகிப்பவராயினும் சரி எண்ணெய் விலையேற்றம் தொடர்பில் பாதிப்பை உணருவதாக கோர்டன் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்