SmallMediumLarge NarrowWideFluid
இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற புஷ் விருப்பம் அச்சிடு E-mail
வியாழன், 26 ஜூன் 2008 07:14

bush.jpgஅணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி புஷ், இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புஷ்ஷின் இந்த விருப்பத்தை, ஜனாதிபதி மாளிகையின் ஊடகச் செயலாளர் டானா பெரினோ வெளியிட்டுள்ளார். 
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிப் பிரதிநிதிகளின் கூட்டம் டில்லியில் நேற்றுப் புதன்கிழமை நடைபெறுவதற்கு முன்னர் இந்தக் கருத்தை அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள  சர்ச்சைகளை  ஜனாதிபதி புஷ் இற்கு அவ்வப்போது தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட ஊடகச்  செயலாளர் டானா பெரினோ, இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதென்று புஷ் கருதுவதாகக் கூறினார். 
 
அடுத்த வருடம்  ஜனவரி மாதம் 20 ஆம் திகதியுடன் புஷ்ஷின் பதவிக் காலம் முடிவடைவதாகவும், புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற புஷ் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
 
அமெரிக்காவில் அடுத்து பதவிக்கு வரவுள்ள  ஆட்சியாளர்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பார்களென அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் காசே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.