இரண்டு நாள் பயணமாக ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஈராக் அரசுடன் தனது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் முகமாக பக்தாத்திற்கான தனது தூதுவர் ஒருவரையும் ஐக்கிய அரபு எமிரேடஸ் நியமித்துள்ளது.
ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சுன்னி அரபு நாடுகளுக்கிடையில் உறவுகள் மேம்பட்டு வருவதன் மற்றுமொரு அறிகுறியாக இந்த நடவடிக்கைகள் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஈராக் சென்றிருந்த நிலையில், 2003ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு நடந்து முடிந்த பின்னர், சுன்னி அரபு நாடொன்றிலிருந்து ஈராக் சென்ற அதிகாரிகளில் பெரும் பதவி கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


