SmallMediumLarge NarrowWideFluid
இந்திய தூதரகம் மீதான குண்டுத்தாக்குதலையடுத்து ஆப்கானுக்கு இந்திய உயர்மட்டக் குழு விஜயம் அச்சிடு E-mail
செவ்வாய், 08 ஜூலை 2008 14:22
afgan.jpgஆப்கானில் இந்திய தூதரகத்திற்கருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்கே இந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர்.  இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது.
 
இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் சூழ்நிலைலையை ஆராய்வதற்காகவே மத்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நளிம் சூரியர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று ஆப்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தக் குழுவினர் ஆப்கானிஸ்தானில் கடமையாற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பில், ஆப்கான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 4 இந்தியர்களது சடலங்களும் நேற்றிரவு இந்திய விமானப்படையின் விசேட விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.