SmallMediumLarge NarrowWideFluid
தொடரும் அமெரிக்க-ரஷிய கருத்து வேறுபாடு: அதிபர்கள் பேச்சில் முன்னேற்றமில்லை அச்சிடு E-mail
செவ்வாய், 08 ஜூலை 2008 15:36

bush.jpgமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய அதிபராக பதவியேற்ற பின், முதல்முறையாக அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஜி-8 மாநாட்டில் திங்கள்கிழமை சந்தித்து பேசிய மெத்வதேவ், இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏதுவும் இல்லை என்றார்.

இருப்பினும், தங்களது கருத்துகள் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா-ரஷியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பனிப் போர் தற்போதும் எதிரொலித்துள்ளதாகவே இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுவ திட்டமிடுதல், நேட்டோ அமைப்பில் ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய நாடுகள் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து வருவது போன்ற காரணங்களால் புஷ் அரசு மீது ரஷியா கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பிலான உறவில் விரிசல் இருந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அடுத்து பொறுப்பேற்கவுள்ள அமெரிக்க அதிபருடன், தான் நல்லுறவை பேண விரும்புவதாக மெத்வதேவ் கூறினார்.

முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüனையும், மெத்வதேவ் சந்தித்துப் பேசினார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.