ரஷிய அதிபராக பதவியேற்ற பின், முதல்முறையாக அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஜி-8 மாநாட்டில் திங்கள்கிழமை சந்தித்து பேசிய மெத்வதேவ், இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏதுவும் இல்லை என்றார்.
இருப்பினும், தங்களது கருத்துகள் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா-ரஷியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பனிப் போர் தற்போதும் எதிரொலித்துள்ளதாகவே இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில், மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுவ திட்டமிடுதல், நேட்டோ அமைப்பில் ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய நாடுகள் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து வருவது போன்ற காரணங்களால் புஷ் அரசு மீது ரஷியா கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பிலான உறவில் விரிசல் இருந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அடுத்து பொறுப்பேற்கவுள்ள அமெரிக்க அதிபருடன், தான் நல்லுறவை பேண விரும்புவதாக மெத்வதேவ் கூறினார்.
முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüனையும், மெத்வதேவ் சந்தித்துப் பேசினார்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





