| தொடரும் அமெரிக்க-ரஷிய கருத்து வேறுபாடு: அதிபர்கள் பேச்சில் முன்னேற்றமில்லை |
|
|
| செவ்வாய், 08 ஜூலை 2008 15:36 |
|
ரஷிய அதிபராக பதவியேற்ற பின், முதல்முறையாக அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஜி-8 மாநாட்டில் திங்கள்கிழமை சந்தித்து பேசிய மெத்வதேவ், இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏதுவும் இல்லை என்றார். இருப்பினும், தங்களது கருத்துகள் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா-ரஷியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பனிப் போர் தற்போதும் எதிரொலித்துள்ளதாகவே இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில், மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுவ திட்டமிடுதல், நேட்டோ அமைப்பில் ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய நாடுகள் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து வருவது போன்ற காரணங்களால் புஷ் அரசு மீது ரஷியா கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிலான உறவில் விரிசல் இருந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அடுத்து பொறுப்பேற்கவுள்ள அமெரிக்க அதிபருடன், தான் நல்லுறவை பேண விரும்புவதாக மெத்வதேவ் கூறினார். முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüனையும், மெத்வதேவ் சந்தித்துப் பேசினார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.