SmallMediumLarge NarrowWideFluid
ஈராக்கிலுள்ள வெளிநாட்டு படைகளை திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பம் அச்சிடு E-mail
புதன், 09 ஜூலை 2008 07:57
ஈராக்கிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினரை திருப்பி அனுப்புவதற்கான கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் நூரிஅல்மாலிக் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அமெரிக்காவுடனான தமது தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சினை பிரதானமாக இடம்பிடித்திருப்பதாக மாலிக் அரபு இராச்சிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இது போன்ற கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது.

அத்தகைய கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டால் கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க படைகள் வெளியே அனுப்பப்படும் வரை காத்திருந்து பிறகு தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள் என்று அமெரிக்கா நம்புகிறது.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கி செயற்படுவதற்கான ஐ.நா. சபையின் அனுமதி இந்த ஆண்டில் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருவதாக கூறும் பாக்த்தாத்திலிருக்கும் பி.பி.சி. செய்தியாளர், இறுதியில் என்ன முடிவெடுக்கப்படும் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.