| ஈராக்கிலுள்ள வெளிநாட்டு படைகளை திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பம் |
|
|
| புதன், 09 ஜூலை 2008 07:57 |
|
ஈராக்கிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினரை திருப்பி அனுப்புவதற்கான கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் நூரிஅல்மாலிக் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அமெரிக்காவுடனான தமது தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சினை பிரதானமாக இடம்பிடித்திருப்பதாக மாலிக் அரபு இராச்சிய அதிகாரிகளிடம் தெரிவித்தார். இது போன்ற கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது. அத்தகைய கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டால் கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க படைகள் வெளியே அனுப்பப்படும் வரை காத்திருந்து பிறகு தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள் என்று அமெரிக்கா நம்புகிறது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கி செயற்படுவதற்கான ஐ.நா. சபையின் அனுமதி இந்த ஆண்டில் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருவதாக கூறும் பாக்த்தாத்திலிருக்கும் பி.பி.சி. செய்தியாளர், இறுதியில் என்ன முடிவெடுக்கப்படும் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.