SmallMediumLarge NarrowWideFluid
பிரான்ஸின் புதிய குடியேற்ற விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கீகாரம் அச்சிடு E-mail
புதன், 09 ஜூலை 2008 08:11

flag-euro.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு விதிகளில் திருத்தங்களை ஏற்படுத்தும் பிரான்ஸின் திட்டங்களுக்கு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் 27 நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொண்ட சம்பிரதாயப்பூர்வமற்றப் பேச்சுகளின் போது குடியேற்ற வாசிகள் மற்றும் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கான பொதுவான விதிகளை உள்ளடக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுமென பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குடியேற்றவாசிகள் குடியேற விரும்பும் நாடுகளின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக் கொள்வது அவசியமென்ற சர்ச்சைக்குரிய விதிகளை பிரான்ஸ் கைவிட்ட பின்னரே சீர்த்திருத்தங்களுக்கு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 8 மில்லியன் சட்ட விரோத குடியேற்றவாசிகள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

சட்ட விரோத குடியேற்ற வாசிகள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் இவ் உடன்படிக்கையின் நோக்கம் சட்ட ரீதியான குடியேற்றவாசிகள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிவகைகளை இலகுவாக்குவதாகும்.

ஐரோப்பாவில் வயதானவர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் பல துறைகளுக்கு குடியேற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.