ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் 27 நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொண்ட சம்பிரதாயப்பூர்வமற்றப் பேச்சுகளின் போது குடியேற்ற வாசிகள் மற்றும் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கான பொதுவான விதிகளை உள்ளடக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ் உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுமென பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடியேற்றவாசிகள் குடியேற விரும்பும் நாடுகளின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக் கொள்வது அவசியமென்ற சர்ச்சைக்குரிய விதிகளை பிரான்ஸ் கைவிட்ட பின்னரே சீர்த்திருத்தங்களுக்கு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 8 மில்லியன் சட்ட விரோத குடியேற்றவாசிகள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சட்ட விரோத குடியேற்ற வாசிகள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் இவ் உடன்படிக்கையின் நோக்கம் சட்ட ரீதியான குடியேற்றவாசிகள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிவகைகளை இலகுவாக்குவதாகும்.
ஐரோப்பாவில் வயதானவர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் பல துறைகளுக்கு குடியேற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





