| பிரான்ஸின் புதிய குடியேற்ற விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கீகாரம் |
|
|
| புதன், 09 ஜூலை 2008 08:11 |
|
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் 27 நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொண்ட சம்பிரதாயப்பூர்வமற்றப் பேச்சுகளின் போது குடியேற்ற வாசிகள் மற்றும் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கான பொதுவான விதிகளை உள்ளடக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ் உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுமென பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடியேற்றவாசிகள் குடியேற விரும்பும் நாடுகளின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக் கொள்வது அவசியமென்ற சர்ச்சைக்குரிய விதிகளை பிரான்ஸ் கைவிட்ட பின்னரே சீர்த்திருத்தங்களுக்கு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 8 மில்லியன் சட்ட விரோத குடியேற்றவாசிகள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சட்ட விரோத குடியேற்ற வாசிகள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் இவ் உடன்படிக்கையின் நோக்கம் சட்ட ரீதியான குடியேற்றவாசிகள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிவகைகளை இலகுவாக்குவதாகும். ஐரோப்பாவில் வயதானவர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் பல துறைகளுக்கு குடியேற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு விதிகளில் திருத்தங்களை ஏற்படுத்தும் பிரான்ஸின் திட்டங்களுக்கு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.