SmallMediumLarge NarrowWideFluid
ஆபிரிக்க நாடுகளுக்கு கூடுதலான நிதியுதவி வழங்க வேண்டும் ஜி8 மாநாட்டில் புஷ் கோரிக்கை அச்சிடு E-mail
புதன், 09 ஜூலை 2008 08:18
g8.jpgஆபிரிக்க நாடுகளுக்கு கூடுதலான நிதியுதவி வழங்க வேண்டுமென ஜப்பானில் நடைபெறும் ஜி8 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி8 கூட்டமைப்பில் உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, மற்றும் கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவ் அமைப்பு அடிக்கடி கூடி உலக நாடுகளின் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

இவ்வருட மாநாடு ஜப்பானின் ஹொக்கெய்டோ தீவில் ஆரம்பமாகியுள்ளது. இதில் இந்தியா, சீனா, பிரேஸில், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்றவை நட்பு நாடுகள் என்ற அளவில் கலந்துகொண்டுள்ளன.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆபிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி, உணவு பிரச்சினை, சிம்பாப்வே நாட்டு விவகாரம், ஆகிய 3 பிரச்சினைகள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஆபிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி விரைவில் அளிக்கப்பட வேண்டும்.

ஆபிரிக்க சிறுவர்களுக்கு நுளம்பு வலைகளை பணக்கார நாடுகள் வழங்க வேண்டும். நுளம்பு கடிகளால், சிறுவர்கள் தேவையில்லாமல் பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும், உலக மக்கள் பட்டினியால் அவதிப்படுவது கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆபிரிக்க மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அதனால் வசதியான நாடுகள், ஆபிரிக்க மக்களுக்கு கூடுதலாக நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் புஷ் வலியுறுத்தினார்.

ஜேர்மன் சான்ஸ்லர் அஞ்செலா மார்கல் பேசுகையில்,

சிம்பாப்வே நாட்டு ஜனாதிபதி தேர்தலில் ரொபேர்ட் முகாபே தனி ஒருவராக போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸி பேசுகையில், ஜி8 நாடுகள் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதில் வல்லரசு நாடுகளாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பிரேசில், தென்னாபிரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளையும் சேர்த்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நாடுகளை ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.