SmallMediumLarge NarrowWideFluid
ஏவுகணைப் பாதுகாப்புத்திட்ட உடன்படிக்கையில் அமெரிக்கா செக் குடியரசு கைச்சாத்து-ரஷ்யா கடும் விசனம் அச்சிடு E-mail
வியாழன், 10 ஜூலை 2008 06:08

flag_usa.jpgசெக் குடியரசில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தின் ஒரு பகுதியை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றில் அமெரிக்காவும் செக் குடியரசும் கைச்சாத்திட்டுள்ளன.

ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எழும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பிலான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக செக் குடியரசின் தலைநகர் பராக்கின் தென்மேற்குப் பகுதியில் ராடர் கண்காணிப்பு திட்டத்தை நிறுவும் உடன்படிக்கையில் அமெரிக்க மற்றும் செக் குடியரசின் வெளிநாட்டமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா செக் குடியரசிலுள்ள தனது எல்லைக்கருகில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசம் நிறுவப்படுமானால் தான் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய வெளியுறவுத் துறை விடுத்துள்ள அறிக்கையில்;

அமெரிக்கா தந்திரோபாய ரீதியில் எமது எல்லைக்கருகில் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை அமைக்குமானால் இதற்குப் பதில் நடவடிக்கையாக இராஜதந்திர வழிமுறைகளை தவிர்த்து இராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளிக்குமுகமாக கருத்துத் தெரிவித்துள்ள பென்டகன் மொஸ்கோ தனது ஆக்கிரமிப்புத் தனமான பேச்சினால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையில் தமது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் ரஷ்யாவை இலக்காகக் கொண்டதல்ல என்பதை விளக்கும் முயற்சியாக தாம் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை இத்திட்டத்தை நிறுவுவது தொடர்பில் மொஸ்கோ முன்வைத்த யோசனைகளை அமெரிக்கா அலட்சியம் செய்துள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.