| ஏவுகணைப் பாதுகாப்புத்திட்ட உடன்படிக்கையில் அமெரிக்கா செக் குடியரசு கைச்சாத்து-ரஷ்யா கடும் விசனம் |
|
|
| வியாழன், 10 ஜூலை 2008 06:08 |
|
ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எழும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பிலான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக செக் குடியரசின் தலைநகர் பராக்கின் தென்மேற்குப் பகுதியில் ராடர் கண்காணிப்பு திட்டத்தை நிறுவும் உடன்படிக்கையில் அமெரிக்க மற்றும் செக் குடியரசின் வெளிநாட்டமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா செக் குடியரசிலுள்ள தனது எல்லைக்கருகில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசம் நிறுவப்படுமானால் தான் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்ய வெளியுறவுத் துறை விடுத்துள்ள அறிக்கையில்; அமெரிக்கா தந்திரோபாய ரீதியில் எமது எல்லைக்கருகில் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை அமைக்குமானால் இதற்குப் பதில் நடவடிக்கையாக இராஜதந்திர வழிமுறைகளை தவிர்த்து இராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்குமுகமாக கருத்துத் தெரிவித்துள்ள பென்டகன் மொஸ்கோ தனது ஆக்கிரமிப்புத் தனமான பேச்சினால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையில் தமது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் ரஷ்யாவை இலக்காகக் கொண்டதல்ல என்பதை விளக்கும் முயற்சியாக தாம் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேவேளை இத்திட்டத்தை நிறுவுவது தொடர்பில் மொஸ்கோ முன்வைத்த யோசனைகளை அமெரிக்கா அலட்சியம் செய்துள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








செக் குடியரசில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தின் ஒரு பகுதியை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றில் அமெரிக்காவும் செக் குடியரசும் கைச்சாத்திட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.