SmallMediumLarge NarrowWideFluid
ஆப்கான் தற்கொலை தாக்குதலின் பின்னணியில் பாக்.உளவு நிறுவனம் அச்சிடு E-mail
வியாழன், 10 ஜூலை 2008 06:34

afgan_flag.jpgஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் இருந்ததாக ஆப்கான் அரசு மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கான் அரசின் பேச்சாளர் அந்த பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் பெயரை நேரடியாகக் கூறவில்லை. ஆனால், இந்தத் தாக்குதல் ஆப்கானில் ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்களை நடத்திய குறிப்பிட்ட உளவு நிறுவனத்தின் பாணியில் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் தான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியத் தூதரகத்துக்கு வெளியே நடந்த இந்தக் குண்டுத்தாக்குதலில் தமது நாட்டுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என முன்னதாக பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரஷா கிலானி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.