| வடகொரியாவின் அணுவாயுத விவகார பேச்சுக்கள் இன்று சீனாவில் ஆரம்பம் |
|
|
| வியாழன், 10 ஜூலை 2008 06:38 |
|
வடகொரியாவின் அணுவாயுத விவகாரம் தொடர்பான பேச்சுக்கள் சீனாவில் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட முன்வந்ததை தொடர்ந்து அந்த நாட்டை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து 6 நாடுகள் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை சீனாவில் தொடங்குகிறது. இதில் வடகொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா ஆகிய 6 நாடுகள் பங்கு கொள்கின்றன. வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் வசதிகள் பற்றிய பட்டியலை அமெரிக்காவிடம் கடந்த மாதம் கையளித்தது. அணுவாயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை அழிக்கும் பணியில் அது கடந்தாண்டு இறுதியில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து தான் அதன் பெயரை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.